ஆர்ப்பாட்டம்
புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திருத்தங்கலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விருதுநகர்
சிவகாசி,
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் குடிநீர் தொட்டியில் கழிவுகள் கலந்ததாக கூறப்படும் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விருதுநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் திருத்தங்கலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட அமைப்பாளர் ஜோதிராஜன் தலைமை தாங்கினார். காசிராஜன் முன்னிலை வகித்தார். தென்மண்டல அமைப்பாளர் வக்கீல் தலித்தர்மா, தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தாவீதுராஜா, மாநில செயலாளர் திண்டுக்கல் கிறிஸ்டோபர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story