பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை
திருப்புனவாசலில் கோரிக்கைகளை வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வேலூர் இப்ராஹிம் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் திருப்புனவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள 15-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும். திருப்புனவாசல் தேரோடும் நான்கு வீதிகளையும் விரிவுபடுத்தி தார்சாலை அமைத்து தராததை கண்டித்தும், திருப்புனவாசலில் உள்ள சிவன் மற்றும் விநாயகர் கோவிலுக்கு வரும் சிவனடியார்கள் மற்றும் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய இடையூறாக உள்ள அரசு டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரி கோஷம் எழுப்பினர்.
Related Tags :
Next Story