சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்


சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம்
x

சி.ஐ.டி.யு.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

8 மணி நேரத்திற்கு பதிலாக 12 மணி நேரம் என வேலை நேரத்தை மாற்றி தமிழக அரசு கொண்டுவந்த தொழிற்சாலைகள் சட்ட திருத்தத்தை கண்டித்தும், இதனை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் சி.ஐ.டி.யு. சார்பில் புதுக்கோட்டையில் சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முகமதலிஜின்னா தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் ஸ்ரீதர், தேவமணி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு.வினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக கோஷங்களை எழுப்பினர்.


Next Story