திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்


திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெமிலியில் நீட் தேர்வை கண்டித்து திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ராணிப்பேட்டை

நீட் தேர்வை கண்டித்து திராவிடர் கழகத்தினர் நேற்று நெமிலி பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மாணவரணி செயலாளர் அமுதன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக திராவிடர் கழக மாநில பொருளாளர் வீ.குமரேசன் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஏழை மாணவர்களின் உயிரை பறிக்கும் நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும். மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு மத்திய அரசு நீட் தேர்வை திரும்ப பெறவேண்டும். தமிழகத்தில் நீட் விலக்கு மசோதாவுக்கு ஆளுனர் ஒப்புதல் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் நரேஷ் மற்றும் சி.ஐ.டி.யூ. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story