அண்ணாமலை நகரில்அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அண்ணாமலை நகரில்அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 27 Dec 2022 6:45 PM GMT (Updated: 27 Dec 2022 6:47 PM GMT)

அண்ணாமலை நகரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூர்


அண்ணாமலை நகர்,

சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இணைப்பில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர் சங்கம் சார்பில் நேற்று காலை பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு ஊழியர் சங்கத் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜான் முன்னிலை வகித்தார். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை வழங்க கோரியும், அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதியர்கள், தினக்கூலி ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மருத்துவமனை ஊழியர் சங்க பாண்டியன், பொருளாளர் மணிகண்டன், இணை பொதுச்செயலாளர் வீரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story