அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2023 6:45 PM GMT (Updated: 26 April 2023 6:45 PM GMT)

சங்கரன்கோவிலில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறையில் உள்ள காலியாக இருக்கும் காலி பணியிடங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஹோமியோபதி மருந்தாளுனர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் வேல்ராஜன், மருந்தாளுனர் முருகன், செவிலியர் தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் மருத்துவ துறை அனைத்து பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story