பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லை மேலப்பாளையத்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை:

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நேற்று மேலப்பாளையம் சந்தை முக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் முகம்மது அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் இம்ரான் அலி வரவேற்றார். நெல்லை மண்டல தலைவர் முகம்மது அமீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி புறநகர் மாவட்ட தலைவர் பீர் மஸ்தான் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்கள்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பை பழிவாங்கும் நோக்கில் அதனுடன் தொடர்புடையவர்களின் வங்கி கணக்குகளை தற்காலிகமாக முடக்கிய அமலாக்கத்துறையை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தமிழ்புலிகள் மாவட்ட செயலாளர் தமிழரசு, எஸ்.டி.பி.ஐ. மாநகர் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, துணை தலைவர் கனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story