கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் சப்- கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எம்.மகேஷ் தலைமை வகித்தார். வட்டத் தலைவர் டி.ஆர்.இளையராஜா வரவேற்றார். கோட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுந்தரேசன் தொடங்கி வைத்து பேசினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு சரண்டர் உடனே வழங்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ரத்து செய்த பட்டப்படிப்பு ஊக்க தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். மாவட்ட மகளிர் அணி தலைவர் ஜெ.ஜெயசூர்யா, வட்ட பொருளாளர் ஹரிதாஸ், ரமேஷ் உள்பட ஏராளமான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். பின்னர் சப் கலெக்டர் லட்சுமியிடம் கோரிக்கை மனு வழங்கினர். முடிவில் மாவட்ட பொருளாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.


Next Story