காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்
x

சோளிங்கரில் கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து தமிழக முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பஸ் நிலையம் அருகே ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கவர்னர் ஆர்.எஸ்.எஸ். கைப்பாவையாக செயல்படுவதாகவும், தமிழ்நாடு என்னும் பெயரை தமிழகம் என மாற்ற முயற்சிப்பதாகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பின்னர் முனிரத்தினம் எம்.எல்.ஏ. கூறுகையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அரசு கொண்டுவந்துள்ள நீட் விலக்கு மசோதா, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உள்ளிட்ட பல்வேறு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். அவர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

நகர தலைவர் கோபால், ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக், செல்வம், உதயகுமார், ஒன்றிய தலைவர் அருண், சங்கரநத்தம் பிச்சாண்டி, தலைவர் தாமோதரன் மற்றும் தொகுதி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story