விவசாயிகளுக்கு செயல்விளக்கம்


விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
x

காரியாபட்டி அருகே விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியப்பட்டி தாலுகாவில் ஊரக பணி அனுபவத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள மதுரை வேளாண்மைக்கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் திரிஷா மற்றும் நவோதயா ஆகியோர் விவசாயிகளின் தேவைகளை கண்டறிந்து பயின்று வருகின்றனர். அதன்படி மாணவி திரிஷா குரண்டி கிராமத்தில் விவசாயிகளுக்காக வாழைத்தண்டு ஊசி பற்றிய செயல் விளக்கத்தையும் அது தொடர்பான துண்டு பிரசுரங்களையும் வழங்கினார்.



Next Story