உடற்கல்வியியல் துறை கருத்தரங்கம்


உடற்கல்வியியல் துறை கருத்தரங்கம்
x

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் துறை கருத்தரங்கம் நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு துறை சார்பில், ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் யோகா என்ற தலைப்பில் வைப்பு கருத்தரங்கம் நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தலைமை தாங்கி விளக்கி பேசினார்.

கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக கனடா நாட்டிலுள்ள பேராசிரியரும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முன்னாள் முதல்வருமான ராமச்சந்திர ரெட்டி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், யோகாவின் முக்கியத்துவம், பழங்கால யோகா உருவான முறை, தற்போது உள்ள யோகா முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவ-மாணவிகளுக்கு தெளிவான முறையில் எடுத்துக் கூறினார்.

கருத்தரங்கில் பங்கு பெற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக பல்கலைக்கழக விளையாட்டு துறை தலைவர் ஆறுமுகம் வரவேற்றார். பேராசிரியர் துரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். முடிவில், பேராசிரியர் சேது நன்றி கூறினார். கருத்தரங்கில் பல்கலைக்கழக மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story