முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்


முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 24 May 2023 6:45 PM GMT (Updated: 24 May 2023 6:45 PM GMT)

சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தில் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர் மேல் படிப்பு படிக்க விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இட ஒதுக்கீடு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2023-2024-ம் கல்வி ஆண்டுக்கு மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பாலிடெக்னிக், பி.எஸ்சி.(நர்சிங்), பி.எஸ்சி. (விவசாயம்), பி.எட்., இந்திய மருத்துவம், பி.வி.எஸ்சி., பி.எப்.எஸ்சி., ஆசிரியர் பயிற்சி, பட்டயப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள் போன்ற பல்வேறு படிப்புகளில் படிக்க தமிழ்நாடு அரசால் முன்னாள் படைவீரர்களை சார்ந்தோர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் சார்ந்தோர் சான்று பெறுதல் வேண்டும். மேலும் இணையதளம் மூலம் முன்னாள் படைவீரரின் அசல் படைவிலகு சான்று, அடையாள அட்டை, சார்ந்தோர்களின் பள்ளி இறுதிச் சான்று, மதிப்பெண் பட்டியல், சாதிச்சான்று கல்வி நிலையத்தில் பெறப்பட்ட விண்ணப்பம், ஓய்வூதியம் ஒப்பளிப்பு ஆணை மற்றும் முன்னாள் படைவீரர் அல்லது விதவையரின் விண்ணப்பம் ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தின் exwelvpm@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பித்து சான்று பெற்று பயன்பெறலாம்.

நிராகரிக்கப்படும்

மேலும் சென்ற கல்வியாண்டில் பெற்ற சார்ந்தோர் சான்றிதழை இந்தக் கல்வியாண்டில் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தப்படும் பட்சத்தில் கலந்தாய்வின்போது தங்களின் மகன், மகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் சார்ந்தோர் சான்று பெறுவதற்கு உரிய சான்று பதிவேற்றம் மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் 04146-220524 என்ற முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு உரிய விவரம் அறிந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story