1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2023 6:45 PM GMT (Updated: 7 Feb 2023 6:46 PM GMT)

கல்வராயன்மலையில் 1,500 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலையில் உள்ள குரும்பலூர், இரும்பலூர், பெஞ்யாறு ஆகிய பகுதிகளில் சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜூக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் கரியாலூர் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான போலீசார் குரும்பலூர், இரும்பலூர் கிராமங்களில் தீவிர சாராய வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு யாரோ மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக 300 கிலோ வெல்லம் பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்த போலீசார் அவற்றை கைப்பற்றினர். மேலும் அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 லிட்டர் சாராய ஊறலை தரையில் கொட்டி அழித்த போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவற்றை பதுக்கி வைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story