2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x
தினத்தந்தி 29 Jan 2023 6:45 PM GMT (Updated: 29 Jan 2023 6:47 PM GMT)

கல்வராயன்மலையில் 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறல் அழிப்பு

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை விளாம்பட்டி, ஊத்துக்குட்டை வனப்பகுதியில் மர்மநபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக சாராய ஊறல் பதுக்கி வைத்திருப்பதாக கரியாலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கரியாலூர் போலீசார் விளாம்பட்டி வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பேரல்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 ஆயிரம் லிட்டர் சாராய ஊறலை கண்டுபிடித்த போலீசார் அவற்றை சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து சாராய ஊறலை பதுக்கி வைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story