200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு


200 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
x

தியாகதுருகம் அருகே 200 லிட்டர் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம் அருகே வேங்கைவாடி பகுதியில் வரஞ்சரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது ராஜி மகன் கண்ணன் என்பவரின் கரும்பு தோட்டத்தில் பேரலில் சாராயம் காய்ச்சுவதற்காக 200 லிட்டர் சாராய ஊறல் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அதனை கீழே கொட்டி அழித்தனர். இது குறித்து நடத்திய விசாரணையில் சித்தலூர் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன் ஆலன் என்பவர் சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் பதுக்கி வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆலன் மீது வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story