சாராயம் கடத்தியவர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது


சாராயம் கடத்தியவர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 3 May 2023 6:45 PM GMT (Updated: 3 May 2023 6:46 PM GMT)

சாராயம் கடத்தியவர் மீது தடுப்பு காவல் சட்டம் பாய்ந்தது

கடலூர்

கடலூர்

விருத்தாசலம் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்தி மற்றும் போலீசார் சிறுபாக்கம் அருகே மா.கொத்தனூரில் ஒரங்கூர்-லக்கூர் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக பதிவெண் இல்லாத மோட்டார் சைக்கிள் ஒன்று வந்தது. இதை பார்த்த போலீசார், அந்த மோட்டார் சைக்கிளை மறித்து அதில் இருந்த 2 லாரி டியூப்களில் சோதனை செய்தனர். அப்போது லாரி டியூப்களில் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், ஒரங்கூரை சேர்ந்த சுதாகர் (வயது 39) என்பதும், சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான சுதாகர் மீது விருத்தாசலம் மற்றும் சிறுபாக்கம் போலீஸ் நிலையத்தில் 9 வழக்குகள் உள்ளன. இதனால் அவரது தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் சுதாகரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம், சுதாகரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுதாகரிடம், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story