ரூ.71.69 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்


ரூ.71.69 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்
x

திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.71.69 லட்சத்தில் வளர்ச்சி திட்ட பணிகள்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை சார்பில் திருவட்டார் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏற்றக்கோடு மற்றும் குமரன்குடி ஊராட்சி பகுதிகளில் முடிவுற்ற மற்றும் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

திருவட்டார் ஊராட்சி ஒன்றியம், ஏற்றக்கோடு ஊராட்சிக்குட்பட்ட திருவட்டார் சாலை முதல் கட்டைக்கால் சாலை வரை தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.43 லட்சம் மதிப்பில் தார் சாலை பணி ஆய்வு செய்யப்பட்டது. அதோடு சிற்றார் பட்டணக்கால் கால்வாய் முதல் கூடளாகம் வரை மகாத்மா காந்தி தேசிக ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரி மேம்படுத்தும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.

இதேபோல் மொத்தம் ரூ.71.69 லட்சம் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்று துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, திருவட்டார் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் யசோதா, கீதா, ஊராட்சி தலைவர்கள் பால்சன் (குமரன்குடி), ஹெப்சிபாய் கிறிஸ்டி (ஏற்றக்கோடு), உதவி பொறியாளர்கள் சஞ்சு பொன்ராஜன், கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story