வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்


வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Jun 2023 6:45 PM GMT (Updated: 20 Jun 2023 6:46 PM GMT)

பள்ளிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் ஷ்ரவன்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார்.

ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் மலர்விழி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊரக பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் உள்பட பல்வேறு திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் திட்டப்பணிகள், தொடங்கப்படாத பணிகளின் தற்போதைய நிலை மற்றும் முடிவுற்ற பணிகள் குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கலெக்டர் ஷ்ரவன்குமார் கேட்டறிந்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து பொதுமக்களுக்கு நேரடியாக பயன்தரக்கூடிய அத்தியாவசியமான வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். குறிப்பாக தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளில் நடைபெற்று வரும் அங்கன்வாடி புனரமைப்பு பணிகள், சுற்றுச்சுவர் பணிகள், வகுப்பறை கட்டிடங்கள், கழிவறை கட்டிட பணி உள்ளிட்ட அனைத்து வளர்ச்சி திட்டப்பணிகளையும் விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன்குமார் உத்தரவிட்டார்.

.கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராணி மற்றும் உதவி திட்ட அலுவலர்கள், நிலையான மண்டல அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story