தேவிப்ட்டினம் பஞ்சாயத்து கூட்டம்


தேவிப்ட்டினம் பஞ்சாயத்து கூட்டம்
x

தேவிப்ட்டினம் பஞ்சாயத்து கூட்டம் நடந்தது.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே உள்ள தேவிபட்டணம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சாதாரண கூட்டம் நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் வழக்கறிஞர் ராமராஜ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாடசாமி, செயலர் பொன் செந்தில் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் மழைக்காலத்தில் குறுக்காற்றில் வெள்ளம் வரும் போது கிணற்றில் உள்ள நீரேற்று மின் மோட்டாரை இயக்க செல்ல முடியாத நிலை ஏற்படுகின்ற காரணத்தால் பழியன் பாறை மீதே மின் மோட்டார் அறை அமைப்பது என்பன தீர்மானம் உள்பட 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் வார்டு உறுப்பினர்கள் மாடக்கண்ணு, ராமராஜ், தங்கராஜ், அ.தங்கராஜ், கிரேஸ், முத்துலட்சுமி, கந்தம்மாள், குருசாமி, கோபால், பூங்கோதை, கனகஜோதி, முத்துமாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story