சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி


சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
x

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி வழங்கப்படுகிறது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரதோஷம் மற்றும் ஆடி மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் மற்றும் கோவில் நிர்வகம் அனுமதி அளித்துள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு வருபவர்கள் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவில் தங்க அனுமதி இல்லை. கோவிலுக்கு வரும் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட பொருட்களை பக்தர்கள் கொண்டு சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். அனுமதிக்கப்பட்ட நாட்களில் பலத்த மழையோ அல்லது நீரோடைகளில் நீர்வரத்து அதிகமாக இருந்தால் பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story