சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி


சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்கள் அனுமதி
x

சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் 4 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு இன்று (8.09.2022) முதல் 11-ந் தேதி வரை 4 நாட்களுக்கு கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது.

பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story