திண்டுக்கல்லில் பக்தர்கள் கிரிவலம்

திண்டுக்கல்லில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
திண்டுக்கல் மலைக்கோட்டையின் உச்சியில் பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சாமி சிலைகள் இல்லாததால் 200 ஆண்டுகளுக்கு மேலாக வழிபாடுகள் நடைபெறவில்லை. எனினும் ஒவ்வொரு மாதமும் மலைக்கோட்டையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர். அதன்படி நேற்று ஆடி மாத பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம் சென்றனர். அப்போது பத்மகிரீஸ்வரர்-அபிராமிஅம்மனை மனமுருக வேண்டிக் கொண்டு பக்தி பாடல்களை பாடியபடி கிரிவலம் சென்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





