சிவன் கோவில்களில் தர்மபுரி ஆதீனம் தரிசனம்


சிவன் கோவில்களில் தர்மபுரி ஆதீனம் தரிசனம்
x

சிவன் கோவில்களில் தர்மபுரி ஆதீனம் தரிசனம் செய்தார்.

திருச்சி

திருவெறும்பூர்:

திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே உள்ள எறும்பீஸ்வரர் கோவிலில் நேற்று தர்மபுரி ஆதீன 27-வது குரு மகா சன்னிதானம் கபிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வந்து சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் கோவில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, அங்கிருந்த பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். இதையடுத்து காசிக்கு நிகரான தலமான திருநெடுங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட திருநெடுங்களநாதர் கோவிலுக்கு சென்ற தர்மபுரி ஆதீனத்திற்கு கோவில் நிர்வாக செயல் அலுவலர் வெற்றிவேல் மற்றும் கோவில் குருக்கள் சோம சுந்தரம் சிவாச்சாரியார் மற்றும் ரமேஷ் சிவாச்சாரியார் ஆகியோர் பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதையடுத்து திருநெடுங்களநாதருக்கு அர்ச்சனை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. அங்கு அவர் சாமி தரிசனம் செய்தார்.


Next Story