மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்


மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டம்
x

பாளையங்கோட்டையில் மின்வாரிய ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை தியாகராஜநகரில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வாரியத்தின் ஒப்பந்தத்திற்கு மாறாக இ-டெண்டர் முறையில் பணியாளர்களை நியமிப்பதை ரத்து செய்ய வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வாரியம் மூலம் நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது.

மாநில துணை பொதுச்செயலாளர் பீர் முகமது ஷா தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட சி.ஐ.டி.யு. செயலாளர் முருகன் தொடக்க உரையாற்றினார். கோட்ட செயலாளர்கள் மந்திரமூர்த்தி, இளையராஜா, சிவராஜ், வேல்முருகன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். திட்ட செயலாளர் கந்தசாமி, பொருளாளர் நாகையன், தென்காசி மாவட்ட செயலாளர் அயூப்கான் உள்ளிட்டோர் விளக்கவுரை ஆற்றினர். மாநில செயலாளர் வண்ணமுத்து நன்றி கூறினார்.


Next Story