திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா


திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா
x

திரவுபதி அம்மன் கோவில் தீ மிதி திருவிழா நடந்தது.

அரியலூர்

கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கடந்த ஒரு வாரமாக மண்டகப்படி நிகழ்ச்சிகள், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு வீதியுலா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சக்தி கரகம் எடுத்தும், தீச்சட்டி ஏந்தியும் பக்தர்கள் முக்கிய தெருக்கள் வழியாக வலம் வந்து கோவிலை அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து அக்னி குண்டத்தில் பக்தர்கள் ஒருவர் பின் ஒருவராக இறங்கி நேர்த்திக்கடன் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். நேற்று மஞ்சள் நீராட்டு விழாவுடன் திருவிழா நிறைவடைந்தது.


Next Story