கழிவறையில் தவறி விழுந்து பெண் சாவு


கழிவறையில் தவறி விழுந்து பெண் சாவு
x

கழிவறையில் தவறி விழுந்து பெண் சாவு

நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே மொளசி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). இவருடைய மகள் வித்தியா ஸ்ரீ (19). இந்த நிலையில் மல்லிகா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற மல்லிகா அங்கு தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலேயே மல்லிகா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மல்லிகாவின் அண்ணன் கன்னியப்பன் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story