குழந்தை இறந்த சோகத்தில் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்


குழந்தை இறந்த சோகத்தில்  கிணற்றில் குதித்து தாய் தற்கொலை  கிருஷ்ணகிரி அருகே பரிதாபம்
x
தினத்தந்தி 22 Sep 2022 6:45 PM GMT (Updated: 22 Sep 2022 6:46 PM GMT)

கிருஷ்ணகிரி அருகே குழந்தை இறந்த சோகத்தில் மனமுடைந்த தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே குழந்தை இறந்த சோகத்தில் மனமுடைந்த தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை இறந்த சோகம்

கிருஷ்ணகிரி தாலுகா பாறையூரை சேர்ந்தவர் பூவரசன். இவருடைய மனைவி வள்ளியம்மாள் (வயது 29). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் உடல் நலக்குறைவால் குழந்தை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டது. அன்று முதல் வள்ளியம்மாள் மன வருத்தத்தில் இருந்தார்.

இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் பாறையூரில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணம் ஆகி 5 ஆண்டுகளுக்குள் பெண் இறந்துள்ளதால் இதுதொடர்பாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story