மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள எழமூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திருவிழாவையொட்டி கடந்த 5-ந் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாரியம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீமிதித்தனர். விழாவில் எழமூர், ஓலைப்பாடி, வயலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்களமேடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

1 More update

Next Story