முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

முத்துமாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள ரிசர்வ்லயன் சிலோன் காலனியில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நடைபெற்ற 32-வது ஆண்டு தீமிதி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி ஏந்தியும், தீ மிதித்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து பால்குடதிருவிழா, பொங்கல் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. திருவிழாவில் சிலோன் காலனி, முத்துராமலிங்க நகர், இந்திராநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்காக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story