திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா

அவளுரில் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது.
காவேரிப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட அவளுர் கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் சித்திரை மாத அக்னி வசந்த விழா 21 நாட்கள் நடைபெற்றது. கடைசி நாளான நேற்று முன்தினம் தீமிதி விழா நடைபெற்றது. பெண்கள், ஆண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் 21 நாட்களாக விரதமிருந்து தீமிதித்து நேர்த்திக்கடன் செய்தனர். தொடர்ந்து இரவு அம்மன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு அனைத்து வீதிகளிலும் ஊர்வலம் வந்தது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் கலந்துகொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





