தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

சிவகங்கை

தெருநாய்கள் தொல்லை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் அதிக அளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் இப்பகுதி மக்கள் வெளியே செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

பொதுமக்கள், இளையான்குடி.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியின் கீழ் தெருவிளக்குகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதிக்கு உட்பட்ட தெருக்களில் தெருவிளக்குள் பகலிலும் ஒளிர்கின்றன.எனவே தெருவிளக்குகளை இரவில் மட்டும் ஒளிர செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆறுமுகம் சேதுராமன், திருப்பத்தூர்.

போக்குவரத்து நெரிசல்

சிவகங்கை நகர் பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகனஓட்டிகள் சாலையில் பயணிக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். எனவே இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதுடன், சீரான பயணத்திற்கு உதவ வேண்டும்.

பாண்டியன், சிவகங்கை.

கூடுதல் பஸ் இயக்கப்படுமா?

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் பகுதியில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கை குறிப்பிட தகுந்த அளவே உள்ளது. இதனால் இங்கிருந்து பயணிக்கும் பெண்கள், பள்ளி மாணவர்கள் காத்திருந்து பயணிக்கின்றனர். எனவே இப்பகுதியில் இருந்து இயக்கப்படும் டவுன் பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.

அன்பு, காளையார்கோவில்.

வாருகால் வசதி வேண்டும்

சிவகங்கை மாவட்டத்தில் ஒரு சில கிராமப்புற பகுதிகளில் வாருகால் வசதிகள் இல்லை. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. எனவே கழிவுநீர் தேங்குவதை தடுக்க வாருகால் வசதி ஏற்படுத்திர தர சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா?

சுரேஷ், சிவகங்கை.


Next Story