தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்


தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர்

சாலை சீரமைக்கப்படுமா?

விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் குண்டாற்று பாலத்திலிருந்து போலீஸ் நிலையம் வரை உள்ள சாலை முற்றிலும் சேதமடைந்து உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சேதமடைந்த இந்த சாலையை விரைவாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முத்துராமன், திருச்சுழி.

கொசுக்கள் தொல்லை

விருதுநகர் மாவட்டம் மாத்தூர் கிராமத்தில் கொசுக்கள் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. கொசுக்கடியால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பிணிகள், முதியோர்கள், மாணவர்கள் சரியான துக்கமின்றி அவதிப்படுகின்றனர். எனவே இந்த பகுதியில் கொசு மருந்து அடித்து கொசுக்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சந்தனகுமார், மாத்தூர்.

நடவடிக்கை தேவை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சுக்கிரவார்பட்டியில் ஆதி திராவிடர் காலனியில் இருந்து மயானத்திற்கு செல்ல முறையான சாலை வசதி இல்லை. இதனால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே அந்தப்பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவாக சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொதுமக்கள், சுக்கிரவார்பட்டி.

சேதமடைந்த சாலை

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகர் மற்றும் கிராமப்புற பகுதியில் சில இடங்களில் சாலை சேதமடைந்து கரடு, முரடாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைகின்றனர். மேலும் விபத்து அபாயம் உள்ளதால் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பழனிவேல், அருப்புக்கோட்டை.

பொதுமக்கள் அவதிதினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தாலுகா எதிர்க்கோட்டை கிராமத்தில் லாரிகளில் தார்ப்பாய் கொண்டு மூடாமல் மண் ஏற்றி செல்வதால் சாலையில் சிதறி காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். எனவே இதனை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜோதிராஜன், எதிர்க்கோட்டை.


Next Story