நேரடி நெல்கொள்முதல் நிலையம்


நேரடி நெல்கொள்முதல் நிலையம்
x
தினத்தந்தி 20 Oct 2022 6:45 PM GMT (Updated: 20 Oct 2022 6:46 PM GMT)

திம்மலை கிராமத்தில் நேரடி நெல்கொள்முதல் நிலையம் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் திறந்து வைத்தார்

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்

தியாகதுருகம் அருகே திம்மலை கிராமத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு தியாகதுருகம் ஒன்றியக்குழு துணை தலைவர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கே.கே.அண்ணாதுரை, நகர செயலாளர் மலையரசன், ஊராட்சி மன்ற தலைவர் தேவி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேல்வழி ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி அப்போலியன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள் நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கொள்முதல் நிலைய கண்காணிப்பாளர் சிங்காரவேல், கணக்காளர் கார்த்திக், நிர்வாகிகள் நெடுஞ்செழியன், மடம்.பெருமாள், ஏழுமலை, முத்து, கவுன்சிலர் தேவி பழனிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story