மனைவி இறந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை


மனைவி இறந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை
x

ராணிப்பேட்டை அருகே மனைவி இறந்த துக்கத்தில் மாற்றுத்திறனாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ராணிப்பேட்டை

மாற்றுத்திறனாளி

ராணிப்பேட்டை மாவட்டம் வானாப்பாடி வசந்தம் அவென்யூ குடியிருப்பை சேர்ந்த மாற்றுத்திறனாளி சங்கர்(வயது 37). இவரது மனைவி ஆதிலட்சுமி (30). ஆந்திர மாநிலம் சித்தூர் காணிப்பாக்கம் பகுதியை பூர்வீகமாக கொண்ட ஆதிலட்சுமி கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து, மாற்றுத்திறனாளியான சங்கரை இரண்டாவதாக திருமணம் செய்து 3 ஆண்டுகள் ஒன்றாக வசித்து வந்தனர்.

அவ்வப்போது அவர்களுக்குள் குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ஆதிலட்சுமி கடந்த 14-ந் தேதியன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி இறந்து போன துக்கத்தில் கடந்த சில நாட்களாக சங்கர் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத போது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ராணிப்பேட்டை போலீசார் சென்று சங்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story