ஆழியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை


ஆழியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை
x
தினத்தந்தி 6 Sep 2023 9:00 PM GMT (Updated: 6 Sep 2023 9:00 PM GMT)

பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நடைபெற்றது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே ஆழியாற்றில் பேரிடர் மீட்பு குறித்த ஒத்திகை நடைபெற்றது.

ஒத்திகை

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்து, வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதையொட்டி மழை வெள்ள சேதங்களை தடுப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தீயணைப்பு துறை சார்பில் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் ஆழியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. இதற்கு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் கணபதி தலைமை தாங்கினார்.

அப்போது ஆற்றில் ஒருவர் தத்தளிப்பது போன்றும், அவரை தீயணைப்பு துறையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்பது போன்றும் தத்துருபமாக நடித்து காண்பித்தனர். மேலும் பேரிடர் மீட்பு குறித்த பல்வேறு செயல்விளக்கங்கள் செய்து காண்பிக்கப்பட்டது.

முதலுதவி சிகிச்சை

இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறியதாவது:-

பருவமழை காலங்களில் ஏற்படும் மழை வெள்ள பாதிப்புகளில் இருப்பது தப்பிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆழியாற்றில் பேரிடர் மீட்பு ஒத்திகை நடைபெற்றது. வெள்ளத்தில் ஒருவர் சிக்கி கொண்டால் பொதுமக்கள் அச்சம் கொள்ள கூடாது. முதலில் கையில் கிடைக்கும் பொருட்களை கொண்டு அவர்களை மீட்க முயற்சி செய்ய வேண்டும்.

அதாவது காலி குடிநீர் பாட்டில்கள், கேன் உள்ளிட்டவைகளை கொண்டு வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் லைப் ஜாக்கெட் பயன்படுத்தி வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது, கயிறு கொண்டு மீட்கும் முறைகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வெள்ளத்தில் சிக்கி மீட்கப்படும் நபர்களுக்கு எவ்வாறு முதலுதவி சிகிச்சை அளிப்பது என்பது குறித்து பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story