3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு


3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
x

நெல்லை டவுனில் 3 வீடுகளில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவுபடி நெல்லை மாநகராட்சி பகுதியில் உள்ள வணிக பயன்பாட்டு கட்டிடங்கள், குடியிருப்புகளுக்கு மாநகராட்சி சார்பில் தீவிர வரி வசூல் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சொத்து வரி, குடிநீர் கட்டணம் செலுத்தாத நெல்லை டவுன் சேரன்மகாதேவி ரோடு பகுதியில் 3 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் நேற்று மாநகராட்சி பணியாளர்களால் துண்டிக்கப்பட்டது.


Next Story