கீழடி 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிப்பு

கீழடியில் நடைபெறும் 10-ம் கட்ட அகழாய்வில் சுடுமண் செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வு பணி நடைபெறும் நிலையில், தற்போது வரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டுள்ளன. ஒரு குழியில் அகழாய்வு மேற்கொண்டபோது, சுமார் 2 அடி ஆழத்தில் சுடுமண் செங்கல் கட்டுமான சுவர் கண்டுபிடிக்கப்பட்டது.
அதில் இருக்கும் ஒவ்வொரு செங்கலும் சுமார் 32 சென்டி மீட்டர் நீளமும், 23 சென்டி மீட்டர் அகலமும், 6 சென்டிமீட்டர் உயரமும் கொண்டுள்ளது. தொடர்ந்து கீழடியில் அகழாய்வு பணிகளை தொல்லியல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





