கோவில் விழாவில் தகராறு; 3 பேர் கைது


கோவில் விழாவில் தகராறு; 3 பேர் கைது
x

கோவில் விழாவில் ஏற்பட்ட தகராறில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி கல்லத்தி அம்மன் கோவில் கொடை விழா நடைபெற்றது. விழாவில் நடந்த கும்ப ஆட்டத்தில் அதே ஊரைச்சேர்ந்த இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் இருதரப்பையும் சேர்ந்த சுடலைமுத்து மகன் மகாதேவன் (வயது 32), முருகன் மகன் மணிகண்டன் (31) ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து இருதரப்பினரும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சக்தி நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, ராஜதுரை (20), முருகப்பெருமாள் (23), வேல்மாரி (24) ஆகிய 3 பேரை கைது செய்தார். மேலும் 7 பேரை வலைவீசி தேடி வருகிறார்.

1 More update

Next Story