துக்க வீட்டில் தகராறு: வார்டு உறுப்பினரை வெட்டிய தந்தை உள்பட 3 பேருக்கு வலைவீச்சு


துக்க வீட்டில் தகராறு: வார்டு உறுப்பினரை வெட்டிய தந்தை உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
x

துக்க வீட்டில் ஏற்பட்ட தகராறால் வார்டு உறுப்பினரை தாக்கிய தந்தை உள்பட 3 பேருக்கு போலீசார் தேடி வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் புதுமாவிலங்கை கிராமம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் இளஞ்செழியன் (வயது 42). இவர் புதுமாவிலங்கை பஞ்சாயத்தில் 7-வது வார்டு உறுப்பினராக உள்ளார்.

நேற்று முன்தினம் இளஞ்செழியன் அதே பகுதியில் உள்ள ராகவன் என்பவரின் தாயார் இறந்ததால் தக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அப்போது அங்கு சாவில் மேளம் அடித்துக் கொண்டிருந்த திருவள்ளூர் அடுத்த சத்தரை மேட்டு காலனியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கும், இளஞ்செழியனுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.

அதைத்தொடர்ந்து இளஞ்செழியன் தன் வீட்டுக்கு சென்று விட்டார். சிறிது நேரம் கழித்து அவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக பேரம்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர் சத்தரை சாலையில் வரும்போது அவரை வழிமறித்த சிவகுமார் அவரிடம் தகறாறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடைய வாய் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சிவக்குமார் தனது மகன்கள் சஞ்சய் மற்றும் விஜயகுமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து அவரை தகாத வார்த்தையால் பேசி கத்தியால் தலை மற்றும் உடலில் வெட்டியும், உருட்டு கட்டையாலும் தாக்கி உள்ளனர்.

இதில் காயமடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் குறித்து இளஞ்செழியன் மப்பேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story