தண்ணீர் பிடிப்பதில் தகராறு:தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது வழக்கு

போடியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் தொழிலாளியை தாக்கிய தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தேனி
போடி நாட்டாமைக்காரன் தெருவை சேர்ந்தவர் முத்துமாணிக்கம் (வயது 52). தொழிலாளி. இவரது வீட்டின் மாடியில் முத்துராம் என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை குழாயில் தண்ணீர் பிடித்து கொண்டிருந்தபோது இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
அப்போது முத்துராம், அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகியோர் சேர்ந்து முத்துமாணிக்கத்தை ஆபாசமாக பேசி கைகளால் சரமாரியாக அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து முத்துமாணிக்கம் போடி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் முத்துராம், அவரது மனைவி பாண்டியம்மாள் ஆகிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story