பெண்ணிடம் தகராறு; டிரைவர் கைது

கடையநல்லூர் அருகே பெண்ணிடம் தகராறு செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர்:
கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் பெரிய தெருவை சேர்ந்த குமார் என்பவருடைய மகன் மாரியப்பன் (வயது 27). டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு பெண்ணை காதலித்து உள்ளார். இந்த காதலுக்கு பெண்ணின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்தப் பெண் அவருடன் பேசுவதை நிறுத்திக் கொண்டார். இந்தநிலையில் தன்னை மீண்டும் காதலிக்க வற்புறுத்தி அந்த பெண்ணிடம் தகராறு செய்துள்ளார். இதுபற்றி அந்த பெண்ணின் பெற்றோர், கடையநல்லூர் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி மாரியப்பனை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





