திருச்செந்தூர் கோவில் கடலில்விநாயகர் சிலை கரைப்பு

திருச்செந்தூர் கோவில் கடலில் விநாயகர் சிலை கரைக்கப்பட்டது.
திருச்செந்தூர்:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாரதிய வியாபார சங்கம் கூட்டமைப்பு சார்பில் காயாமொழியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலை நேற்று முன்தினம் மாலையில் திருச்செந்தூர் ஆனந்த விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த தீபாராதனைக்கு பின்னர் விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, கோவில் கடலில் கரைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், இந்து தேசிய கட்சி நிறுவன தலைவர் எஸ்.எஸ்.எஸ்.மணி, பாரதிய வியாபாரிகள் சங்க கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





