பனை விதைகள்-கன்றுகள் மானியத்தில் வினியோகம்


பனை விதைகள்-கன்றுகள் மானியத்தில் வினியோகம்
x

பனை விதைகள்-கன்றுகள் மானியத்தில் வினியோகம் செய்யப்பட உள்ளது.

அரியலூர்

பனை மரம் தமிழர்களின் வாழ்வோடும், மொழியோடும் இணைந்த மரமாக இருக்கிறது. நிலத்தடி நீரை அதிகரித்தல், மண் அரிப்பை தடுத்தல் என மண்ணிற்கு உகந்த மரமாக உள்ளது. மேலும், அடி முதல் நுனி வரை பயன் தந்து பலருக்கு வாழ்வாதாரமாகவும் இம்மரம் விளங்குகிறது. பனை சாகுபடியை ஊக்குவிப்பதற்காகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், நடப்பு நிதியாண்டில் அரியலூர் மாவட்ட தோட்டக்கலை துறைக்கு இலக்காக 30 ஆயிரம் பனை விதைகள் மற்றும் 125 பனை கன்றுகள் மானியத்தில் வினியோகம் செய்ய ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 500 நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 பனை விதைகள் மற்றும் 10 பனை கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகியோ அல்லது www://tnhorticulture.gov.in/tnhortnet/registration என்ற இணையதளத்தில் பதிவு செய்தோ பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார்.


Next Story