மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி


மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி
x

மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி நடந்தது.

திருச்சி

திருச்சி அண்ணா உள் விளையாட்டு அரங்கில், முதலாவது மேஜர் சரவணன் நினைவு மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி நேற்று நடந்தது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடந்த இந்த போட்டியில் மாவட்டம் முழுவதிலும் இருந்து 320 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். 9 வயதுக்கு உட்பட்டவர்கள், 11 வயதுக்கு உட்பட்டவர்கள், 13 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 15 வயதுக்கு உட்பட்டவர்கள் என்ற பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை, போட்டி ஒருங்கிணைப்புக்குழு செயலாளர் முத்துக்குமார், பயிற்சியாளர் ராகுல் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story