மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம்


மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம்
x

மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் கரூரில் நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் மூன்றாம் காலாண்டு ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களின் நிலுவையில் உள்ள வழக்குகளை உரிய காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு, விசாரணை அறிக்கையினை தாக்கல் செய்யவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் போலீஸ் துணை சூப்பிரண்டுகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வன்கொடுமை தடுப்பு வழக்குகளை விரைந்து நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் நீதி பெற்றுத்தருமாறு அரசு சிறப்பு வக்கீலுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.


Next Story