மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் தேர்வு


மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் தேர்வு
x

மாவட்ட பா.ம.க. நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

பா.ம.க. தலைமை நிர்வாகிகள் மூலம் மாவட்ட நிர்வாகிகள் தேர்வு கூட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி ரவி தலைமை தாங்கினார். சமூக நீதிப் பேரவை தலைவரும், பா.ம.க. வக்கீலுமான பாலு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் தலைமை அலுவலகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட மாநில தேர்தல் பணிக்குழு இணை செயலாளர் இசக்கி, மாநில தேர்தல் பணிக்குழு தலைவர் பேராசிரியர் செல்வகுமார், தர்மபுரி மாவட்ட அமைப்பு செயலாளர் சண்முகம், சென்னை ராயபுரம் பசுமைத்தாயக அமைப்பு செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேர்முக தேர்வு மூலம் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்தனர். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் பரசுராமன் நன்றி கூறினார்.


Next Story