இன்று கூடுகிறது ஓ.பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


இன்று கூடுகிறது ஓ.பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

கோப்புப்படம்

ஓ.பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது.

சென்னை,

ஓ.பன்னீர் செல்வம் அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. டிடிவி தினகரன் சேர்ந்து செயல்படுவோம் என்று அறிவித்த நிலையில் அடுத்த கட்ட நகர்வு குறித்து ஆலோசனை நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

முன்னதாக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் குறித்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வெளியிட்டிருந்த அறிக்கையில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசியல் ஆலோசகர் திரு. பண்ருட்டி ச. இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில், சென்னை, எக்மோர், பாந்தியன் சாலையில் உள்ள அசோகா ஹோட்டலில் 01-07-2023 சனிக்கிழமை காலை 10.31 மணிக்கு நடைபெறும். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளர், கழகப் பொருளாளர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.


Next Story