திருப்பத்தூரில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு விழா


திருப்பத்தூரில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு விழா
x

திருப்பத்தூரில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவி ஏற்பு விழா நடந்தது.

திருப்பத்தூர் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் க.தேவராஜ், ஏ.நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவராக டி.சந்திரசேகரன் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்

நிகழ்ச்சியில் தேவராஜ் மற்றும் நல்லதம்பி எம்.எல்.ஏ. பேசுகையில், ''இந்து சமய அறநிலைத்துறைக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்தி வழங்கி வருகின்றனர்.

மேலும் தனியார் நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை அரசுக்கு மீட்டுக் கொடுத்த உள்ளனர்'' என்றனர்.

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ராஜேந்திரன் நகராட்சித் தலைவர் சங்கீதா வெங்கடேஷ், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் விஜயா, உதவி ஆணையர் சித்ராதேவி மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயல் அலுவலர் சண்முகம் நன்றி கூறினார்.


Next Story