தீபாவளி பண்டிகை: நாகர்கோவில்-பெங்களூரு இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்


தீபாவளி பண்டிகை: நாகர்கோவில்-பெங்களூரு இடையே இன்று சிறப்பு ரெயில் இயக்கம்
x

இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

நாடுமுழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் நாகர்கோவில்-பெங்களூரு இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

அதன்படி, நாகர்கோவிலில் இருந்து 7-ந் தேதி (இன்று), 14, 21-ந்தேதிகளில் (செவ்வாய்க்கிழமைகளில்) இரவு 7.35 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06083), மறுநாளில் பகல் 12.30 மணிக்கு பெங்களூருவை சென்றடையும்.

இந்த ரெயில் (06084) மறுமார்க்கமாக பெங்களூருவில் இருந்து 8, 15, 22-ந்தேதிகளில் (புதன்கிழமைகளில்) பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாளில் காலை 6.10 மணிக்கு நாகர்கோவிலை வந்தடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story