தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா


தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா
x

சோளிங்கரில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ராணிப்பேட்டை

சோளிங்கர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இதில் ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார், தி.மு.க. மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு அண்ணா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். ஊராட்சி ஒன்றிய அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து மேற்கு ஒன்றியத்தில், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் கரிக்கல் கிராமத்தில், மத்திய ஒன்றிய செயலாளர் பூரண சந்திரன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் போளிப்பாக்கத்தில் முன்னாள் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் அண்ணா திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.

இதேபோன்று சோளிங்கர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சோளிங்கர் பஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும், திருவுருவப்படத்திற்கும் முன்னாள் எம்.எல்.ஏ. சம்பத் மாலை அணிவித்தார். இதில் ஒன்றிய செயலாளர் ஏ.எல்.விஜயன், நகராட்சி உறுப்பினர் மணிகண்டன் மற்றும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்.


Next Story